
உயிரே உறவே எந்தன் உமையாளின் மகனே
கன்னலே கனியமுதே கண் ஏசனின் கவிதையே
ஆயிரம் கதை சொல்லும் கண் கொண்ட ஆண் மயிலே
தின்னத் துடிக்கும் கன்னங்கள் கொண்ட திருமகனே
த்தரணியிலே நீ பிறந்து தவழ்ந்து நடந்து த்தோடு ஆண்டொன்று
தத்தித் தத்தி நீ நடை பயில அன்னமும் தடுமாறும்
ன்றெனக்கு இம்மழலை போட்டியாவெ ன்று குழம்பிப் போகும்
முழு நிலவே நீ சிரிக்க முத்துக்கள் முகம் சிவக்கும்
தளிர்க் கரமும் தவழ் நடையும் கொண்ட தனித்தழிழே
ல்லத்தில் விளையாடும் மழலையேந ல்லறம் சொல்கிறேன்
பிறருக்கு நன்மை செய்யும் குணம் வளர்ப்பாய் பிறைநிலவே
(இ)றந்தாலும் உன் பெயரை இவ்வுலகம றக்காமலிருக்கச் செய்வாய்
(இ)ந்திய மண்ணில் பிறந்த ஈடற்ற (இ)ந்தியன் நீயெனக் காட்டுவாய்
தமிழுக்கும் தரணிக்கும் புகழ் சேர்க்க தமிழே நீ எழுவாய்
நாள் நட்சத்திரம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை நாசப்படுத்துவாய்
(து)ள்ளி விளயாடும் மானே நீ ஏழைகளுக்கு ( வ)ள்ளலாவாய்..!
0 comments:
Post a Comment