Saturday, August 16, 2008
Tuesday, August 12, 2008
பள்ளிக்கூடம் போகலாம் வா பாப்பா... - சிறுவர் பாடல்
நல்ல பாடங்களைப் படிக்கலாம் வா பாப்பா...
புது நண்பர்கள் கிடைப்பர் வா பாப்பா...
புதிய உலகத்தைக் காண வா பாப்பா..!
வீட்டில் இருந்தது போதும் பாப்பா...
விரைந்து நீ எழுந்து வா பாப்பா...
ஒழுங்காய் தினமும் பள்ளி சென்று
ஒழுக்கமதை கற்போம் வா பாப்பா...
தாய் தமிழ் கற்கலாம் வா பாப்பா...
தரணி மீதில் நடந்திட வா பாப்பா...
இலக்கணத்தை கற்போம் வா பாப்பா..
இலக்கணமாய் வாழ்வோம் வா பாப்பா..!
இலக்கியம் கற்போம் வா பாப்பா...
இயல்பாய் வாழ்வோம் வா பாப்பா
இயற்கையை அறிவோம் வா பாப்பா...
அதனுடன் இயைவோம் வா பாப்பா..
அயல் மொழி கற்போம் வா பாப்பா...
அகிலத்தை அறிவோம் வா பாப்பா..!
கணிதம் படிப்போம் வா பாப்பா..!
கணக்காய் வாழ்வோம் வா பாப்பா..!
அறிவியல் படிப்போம் வா பாப்பா...
அறிவைப் பெருக்கொவோம் வா பாப்பா..!
வரலாறு படிப்போம் வா பாப்பா..!
வாழ்ந்து காட்டுவோம் வா பாப்பா..!
புவியியல் படிப்போம் வா பாப்பா..!
பல புதிர்களை அவிழ்ப்போம் வா பாப்பா..!
வானியல் படிப்போம் வா பாப்பா..!
வானில் நடப்போம் வா பாப்பா..!
கடலியல் படிப்போம் வா பாப்பா..!
கருத்தாய் வாழ்வோம் வா பாப்பா..!
உடலியல் படிப்போம் வா பாப்பா..!
நோயின்றி வாழ்வோம் வா பாப்பா..!
கல்வி கற்க வா பாப்பா..!
கற்பூரமாய் நீ படி பாப்பா..!
பாடம் படிக்க வா பாப்பா..!
பகுத்தறிவை வளர்க்க வா பாப்பா..!
Tuesday, June 17, 2008
கல்வி என்பது..?
அறியாமை இருளகற்றும்
அகல் விளக்கு..!
ஆச்சர்யங்களை உடைத்தெறியும்
ஆச்சர்யக்குறி..!
இயற்கையின் சிக்கலைக் கூட
இயல்பாய்க் காட்டும் இயல்..!
ஈரேழு உலகங்களையும் (பேரண்டம்)
ஈர்ப்போடு காட்டும் ஈர்ப்புச் சட்டம்..!
உண்மைகளை வெளிக்கொணரும்
உன்னத ஒளிவிளக்கு..!
ஊசலாடும் வாழ்க்கையில் ஊடாடும்
ஊட்டப்பயிர்..!
எது உண்மை... எது பொய்மையென
எடுத்துக் காட்டும் நியாயத்தராசு..!
ஏன்..? எதற்கு..? எப்படி..? என்கிற கேள்விகளுக்கு
ஏகாந்தமாய் பதில் தரும் பட்டறிவுச் சுரங்கம்..!
ஐயங்களை அடியோடகற்றி
ஐம்புலனையும் கூர் தீட்டும் பாசறை..!
ஒன்று, இரண்டு, மூன்று என்று கணிதத்தை
ஒரு பிழையுமின்றி கற்றுத்தரும் கற்பகத்தரு..!
ஓதாமல் இருப்பவரைக் கூட தன்திறமையால்
ஓதவைக்கும் மந்திரக்கோல்..!
ஔவைக்கு மட்டுமின்றி.. அனைவருக்கும் கிடைத்த
ஔடத மாத்திரை..!
ஃகறை இல்லாத அசடுகளுக்கு
ஃகறையுள்ள ஆயுதம்..!
Sunday, June 15, 2008
குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்
ஆண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்
(தேவையான எழுத்து வரிசைக்கு செல்ல இதன் கீழ் உள்ள எழுத்துகளில் சொடுக்கவும்)
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ஞ ச த ப
'அ' வரிசை
அகத்தியன்
அகவேந்தன்
அகிலன்
அசோகன்
அடலேறு
அண்ணல்
அமரன்
அமர சிம்மன்
அமர வர்மன்
அமர வீரன்
அமர வேந்தன்
அமலன்
அமிர்தரசன்
அமுதன்
அமுதரசன்
அமுத வாணன்
அதியமான்
அய்யன்
அரசன்
அரசிளங்குமரன்
அருள் மொழி வர்மன்
அழகன்
அழகரசன்
அழகரசு
அவனி சேகரன்
அவனி சூளாமணி
அறவாணன்
அறிவரசன்
அறிவரசு
அறிவுமதி
அறிவுநிதி
அறிவொளி
அன்பன்
அன்பரசன்
அன்பரசு
அன்பழகன்
அன்புச்செல்வன்
'ஆ' வரிசை
ஆகவ மல்லன்
ஆகாய சிம்மன்
ஆகாய வேந்தன்
ஆடவல்லான்
ஆடலரசன்
ஆதவன்
ஆதித்தன்
ஆதித்த சோழன்
ஆதித்த கரிகாலன்
'இ' வரிசை
இசையரசன்
இசை வேந்தன்
இமயன்
இமயவர்மன்
இமயவரம்பன்
இமய வீரன்
இதயன்
இதய சிம்மன்
இதய வர்மன்
இதய வேந்தன்
இலக்கியன்
இலக்கிய வேந்தன்
இளங்காளை
இளங்கோ
இளங்கோவன்
இளம்பரிதி
இளமாறன்
இளமணிமாறன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இன்பன்
இன்ப வாணன்
இன்ப சேகரன்
இனியன்
இனியவன்
'ஈ' வரிசை
ஈகை அரசு
ஈகை மார்பன்
ஈகை மாறன்
ஈழ வேந்தன்
'உ' வரிசை
உத்தமன்
உதயன்
உதயகுமாரன்
உதய சிம்மன்
உதய சூரியன்
உதய வர்மன்
உதய வேந்தன்
உளமாறன்
'ஊ' வரிசை
ஊரன் அடிகள்
ஊர்க்காவலன்
ஊசிமாறன்
ஊடல் மாறன்
ஊடல் வேந்தன்
ஊடலழகன்
'எ' வரிசை
எழில்
எழில் அரசன்
எழில் வர்மன்
எழில் வேந்தன்
எழில் மார்பன்
எழில் வீரன்
எழிலன்
'ஏ' வரிசை
ஏழிசை மார்பன்
ஏழிசை வேந்தன்
ஏழிசையரசன்
ஏழிசையரசு
'ஐ' வரிசை
ஐயன்
ஐந்திணை மார்பன்
ஐந்திணை வேந்தன்
'ஒ' வரிசை
ஒளியன்
ஒளி மாறன்
ஒளி வேந்தன்
ஒட்டக் கூத்தன்
'ஓ' வரிசை
ஓரி
ஓசை மார்பன்
'ஔ' வரிசை
ஔவை மகன்
ஔவை நாடன்
'க' வரிசை
கதிர் அழகன்
கதிர் வண்ணன்
கதிரவன்
கடல் மன்னன்
கடலரசன்
கடல் வேந்தன்
கடுங்கோன்
கணைக்கால் இரும்பொறை
கபிலன்
கரிகாலன்
கரிகால சோழன்
கவிஞன்
கவிச்சூரியன்
கவிமணி
கவிமாறன்
கவிபாரதி
கவிவேந்தன்
கன்னலமுதன்
கனல் அரசன்
கனல் வேந்தன்
கார்முகிலன்
கார்மேகம்
காளமேகம்
குணவேந்தன்
குணசிம்மன்
குணசீலன்
குணாளன்
குலசேகரன்
குலசேகர பாண்டியன்
'ச' வரிசை
சந்திரன்
சந்தன பாண்டியன்
சந்தன மார்பன்
சந்திர வர்மன்
சந்திர பாண்டியன்
சுந்தரன்
சுந்தர பாண்டியன்
சுதந்திரன்
சூரியன்
சூரிய சிம்மன்
சூரிய வர்மன்
செங்குட்டுவன்
செங்கோடன்
செந்தமிழ்
செந்தமிழ் மாறன்
செந்தமிழ் பாண்டியன்
செந்தமிழ் வீரன்
செந்தமிழ் வேந்தன்
செந்தமிழன்
செந்தமிழோன்
செந்நாப் புலவன்
சேரன்
சேர வேந்தன்
சேரமான்
சேர சோழன்
சேரன் கணைக்கால் இரும்பொறை
'ஞ' வரிசை
ஞாலன்
ஞால வேந்தன்
ஞாயிறு
'த' வரிசை
தமிழ்
தமிழ் அழகன்
தமிழ் மன்னன்
தமிழ் மாறன்
தமிழ் வாணன்
தமிழண்ணல்
தமிழரசன்
தமிழரசு
தமிழாசான்
தகடூரான்
தகழி வேந்தன்
தகை வேந்தன்
தயாநிதி
தில்லை மாறன்
தில்லையாளன்
தில்லையரசன்
திருமார்பன்
திருநாவுக்கரசன்
'ப' வரிசை
பரணன்
பரிதி
பழமலை
பன்னீர் செல்வம்
பாணன்
பாரதி
பாரி
பாவாணன்
பாவிசைக்கோ
பாவேந்தன்
பிறை சூடி
புகழேந்தி
புரட்சி மணி
பூங்கண்ணன்
பூங்குன்றன்
பூவண்ணன்
பெரியண்ணன்
பெருவழுதி
பேகன்
பொய்யா மொழி
பொருநன்
பொழிலன்
பொன்மணி
பொன்முடி
பொன்னையன்
பொன்னன்
Wednesday, May 28, 2008
குயிலே.. குயிலே... குயிலக்கா...! - குழந்தைப் பாடல்
குயிலே.. குயிலே... குயிலக்கா..!
நீ கூவும் குரல் தேனக்கா...!
வானம்பாடி போலவே நீ தினமும்
'கானம்'பாடி சுற்றுகிறாய்..!
இவ்வளவு அழகாய் பாடுவற்கு
எங்கே நீ கற்றுக் கொண்டாய்..!
நானும் உன்போல் பாடுவதற்கு
எனக்கும் சொல்லேன் குயிலக்கா..!
உன் நிறம் தான் கறுப்பக்கா..!
உண் கண் நிறமோ சிவப்பக்கா..!
உன் உருவம் சிறிதே ஆனாலும்
உன் குரல் வளமோ அழகக்கா..!
நீ தூரத்தில் கூவும் குரல் கேட்டு
என் செல்லத் தம்பி விளம்புகிறான்..!
யாரண்ணா அங்கு பாடுவது
என் முன்னே வந்து பாடச் சொல்..!
நீங்கள் வாழ மரமில்லை..?
மரங்களை வைக்க எங்களுக்கு மனமில்லை
வனங்கள் மறைந்து போயினவே
என வேறிடம் செல்ல போகிறாயோ...!
எங்கே நீ பறந்து சென்றாலும்
எங்களை நீ மறவாதே..!
நீ வாழ நாங்கள் அரும் பெரும்
மரங்களை மீண்டும் வளர்கின்றோம்..!
வனங்கள் இல்லை என்று வாடாதே..!
மீண்டும் வனங்களை உருவாக்குகின்றோம்..!
இருப்பிடம் தேடி வேறிடம் போகாதே
உன்னை இரு கரம் கூப்பி கேட்கின்றோம்..!
-க. ஆதித்தன். 08.04.2008
(17.05.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
தீபாவளி... தீபாவளிதான்...! -குழந்தைப் பாடல்
தித்திக்கும் தீபாவளிதான்
புத்தாடை தீபாவளிதான்
வெடி பட்டாசு தீபாவளிதான்...
அதிகாலையிலே எழுந்து
அதிர்வேட்டை போட்டு
அருகிலுள்ளோரை எழுப்பும்
ஆரவார தீபாவளிதான்...
புத்தம் புது ஆடைகளை
மகிழ்வுடன் அணிந்து கொண்டு
உறவுகளோடு வீதிவலம் வருகின்ற
விருப்பமான தீபாவளிதான்...
பூந்தி, லட்டு, ஜிலேபி, முறுக்கு,
வடை, அதிரசம் என அனைத்து
வகை பலகாரங்களையும் சாப்பிட
சுவையான தீபாவளிதான்...
பூத்துச் சிரிக்கும் மத்தாப்பு
வானை மிரட்டும் வானவெடி
சந்தியில் வைக்கும் சரவெடி என
டமால்... டுமீல்... தீபாவளிதான்...
தம்பி பிடிக்க கம்பி மத்தாப்பு
தங்கை வைக்க புஸ்வானம்
அக்கா வைக்கும் லட்சுமி வெடி
என அசர வைக்கும் தீபாவளிதான்...
அத்தனை ரக பட்டாசுகளும்
அழகழகாக வெடிப்பதால்
நம் அனைவரின் மனதிலும்
உற்சாகம் கொடுக்கும் தீபாவளிதான்...
விலங்குகளுக்கும் தொந்தரவின்றி
முதியோர்களுக்கும் தொந்தரவின்றி
நோயாளிகளுக்கும் தொந்தரவின்றி
பட்டாசு வெடித்தால் பட்டான தீபாவளிதான்...
குடிசைகள் இருக்கும் பார்த்துக் கொள்
பெட்ரோல் நிலையங்கள் இருக்கும் பார்த்துக் கொள்
கொளுத்தும் போது கவனம் கொண்டால்
கொண்டாட்டமான தீபாவளிதான்...
-மோ. கணேசன்.
(03.11.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
'உம்'கார ஆத்திச்சூடி!
அன்பாக இருக்கனும்...
ஆசைகளை அடக்கனும்...
இனிமையாகப் பழகனும்...
ஈகை குணம் வளர்க்கனும்...
உண்மையையே பேசனும்...
ஊக்கத்தோடு படிக்கனும்...
எளிமையாக இருக்கனும்...
ஏற்றம் பெற உழைக்கனும்...
ஐயங்களைப் போக்கனும்...
ஒற்றுமையாய் வாழனும்...
ஓடி விளையாடனும்...
ஓளவை வழி நடக்கனும்...
ஃதே வாழ்வின் இலக்கணம்..!
-மோ. கணேசன். 29.9.07
நாமும் கலாம் ஆ'கலாம்' - குழந்தைப் பாடல்
பள்ளிக்கூடம் போ'கலாம்'
பகுத்தறிவை வளர்க்'கலாம்'
நல்ல பாடம் படிக்'கலாம்'
நல்லறிவை வளர்க்'கலாம்..!'
தாய்த் தமிழை கற்'கலாம்'
தரணி போற்ற வாழலாம்
ஆங்கிலத்தைக் கற்'கலாம்'
அகிலம் முழுக்க சுற்றலாம்..!
கணக்குப் பாடம் கற்'கலாம்'
கணிதப் புலி ஆ'கலாம்'
அறிவியலைக் கற்'கலாம்'
அறிவில் சிறந்து நிற்'கலாம்..!'
வரலாற்றைப் படிக்'கலாம்'
முன்னோர் வழி நடக்'கலாம்'
புவியியலைப் படிக்'கலாம்'
புதியனவற்றைப் படைக்'கலாம்..!'
அறிவியல் தமிழ் கற்'கலாம்'
அண்டத்தை அறியலாம்
கணிப்பொறியைக் கற்'கலாம்'
புது கண்டுபிடிப்புகள் செய்யலாம்..!
இவைகளனைத்தும்
செய்து விட்டால் நாமும்
அப்துல் 'கலாம்' ஆ'கலாம்'
நாடு போற்ற வாழலாம்..!
-மோ. கணேசன். 28.9.07
(27.10.2007 அன்று தினமணி - சிறுவர்மணியில் வெளிவந்த பாடல்)
எங்கள் நேரு மாமா! - குழந்தைப் பாடல்
இந்தியாவின் விடுதலைக்கு
முந்தி நின்ற வீரர்களில்
முன்னே நின்ற வீரராம்
எங்கள் நேரு மாமா...
விடுதலைக்குப் பின்
நாட்டின் முதல் பிரதமாராய்
ஆட்சி செய்த பிதாமகராம்
எங்கள் நேரு மாமா...
பார் போற்றும் காந்தியடிகளாரின்
நேர் கூற்று வாக்குப்படி
ஊர் போற்ற ஆட்சி செய்தவராம்
எங்கள் நேரு மாமா...
நம் நாட்டின் செல்வங்களை
வெள்ளையர்கள் திருடிச் சென்ற
வேதனைகளை துடைத்தவராம்
எங்கள் நேரு மாமா...
வறுமையில் சிக்கியிருந்தவர்களை
பொறுப்போடு காப்பாற்ற - புதுத்
தொழில் திட்டங்களை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா...
நம்மிடம் சண்டை போடும் நாடுகளை
நட்பு கொண்ட நாடுகளாய் மாற்ற
பஞ்ச சீலக் கொள்கை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா...
இந்தியாவின் இரும்புப் பெண்மணி
இந்திரா காந்தியை நமக்கு
வழங்கிட்ட வள்ளலாம்
எங்கள் நேரு மாமா...
குழந்தைகளின் நெஞ்சத்திலே
என்றும் பூத்திருக்கும்
இதயத்து ரோஜா மலராம்
எங்கள் நேரு மாமா...
- மோ. கணேசன்.
(10.11.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
(நவம்பர் 14 பண்டித ஜவஹர்லால் நேருவின் 119 -வது பிறந்தநாள்)
யானையம்மா யானை..! - குழந்தைப் பாடல்
யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!
அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!
அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!
இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!
குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!
- மோ. கணேசன்.
மரம் வளர்ப்போம் வாருங்கள்! -குழந்தைப் பாடல்
மரம் வளர்ப்போம் வாருங்கள்
மாமழை பெறுவோம் வாருங்கள்
யாகம் வளர்த்தால் மழை வரும் என்ற
மடமையைப் போக்குவோம் வாருங்கள்!
யாகம் வளர்ப்பது மூடத்தனம்
மரம் வளர்ப்பது மூலதனம்
செடி கொடி வளர்த்துப் பாருங்கள்
வெம்மை நீங்கி வாழலாம்!
மக்கள் தொகை பெருக்கத்தால்
காட்டு வளங்கள் அழிகின்றன
காட்டு வளங்கள் அழிவதால்
கானல் வெப்பம் அதிகரிக்கும்!
வெப்பம் உலகில் அதிகரித்தால்
வேண்டா விளைவுகள் ஏற்படுமே
மழை நீர் மறைந்து போகும்
மனித இனம் அழிந்து போகும்!
வனவிலங்குகள் மாண்டு போகும்
புல் பூண்டுகள் தொலைந்து போகும்
பூமிப் பந்து நெருப்பாகும்
வேண்டாம் இந்த விபரீதம்!
புவியின் வெப்பம் தணிக்கவே
பூமியெங்கும் மரம் நடுவோம்
மழை வளம் காக்கவும் மனித வளம் காக்கவும்
மரம் வளர்ப்போம் வாருங்கள்!
-மோ. கணேசன்
(30.06.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
ஆலோலங்கிளி! - குழந்தைப் பாடல்
அழகுக்கிளி வீட்டிலே!
ஆடுது பார் பைங்கிளி
பச்சைக்கிளி மூக்கிலே சிவப்பு நிறம் ஜொலிக்குதே!
பஞ்சவர்ணக் கிளியுண்டு
பச்சை நிறக் கிளியுண்டு
வெள்ளை நிறக் கிளியுண்டு
வெண்கொண்டையுள்ள கிளியுண்டு!
படகு போல சிறகுகளாம்
நீளமான இறகுகளாம்
குட்டியூண்டு கண்களாம்
குபீரென்று பறந்தோடுமாம்!
நெல், கம்பு தானியங்களை
நேர்த்தியாக உண்ணுமாம்
வளைந்திருக்கும் வாயாலே
வாகாய் பழங்களைத் தின்னுமாம்!
பிள்ளைகளுடன் விளையாடவே
கிள்ளை மொழி பேசுமாம்
மனிதருடன் பழகுமாம்
மானுடர் போலவே பேசுமாம்!
-மோ. கணேசன்
(30.09.2006 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
ஆதித்தனுக்காக நவீன ஆத்திசூடி..!
ஆதித்தா நீ மலர்ந்தாய்..!
இன்றோடு நீ பிறந்து
ஈராண்டு முடிந்தாலும்
உந்தன் வளர்ச்சிக்கு
ஊட்டமாய் உன் அன்னை..!
எதிலும் நீ வெற்றி காண
ஏணியாய் உன் தந்தை..!
ஐயங்கள் அகற்று..!
ஒற்றுமையைக் கற்றுக் கொள்..!
ஓய்வின்றிப் பயில்..!
ஓளவையின் மொழி கேள்..!
ஃதே உனக்கு ஆயுதம்..!
எனது முதல் பிறந்தநாள் கவிதை
உயிரே உறவே எந்தன் உமையாளின் மகனே
கன்னலே கனியமுதே கண் ஏசனின் கவிதையே
ஆயிரம் கதை சொல்லும் கண் கொண்ட ஆண் மயிலே
தின்னத் துடிக்கும் கன்னங்கள் கொண்ட திருமகனே
த்தரணியிலே நீ பிறந்து தவழ்ந்து நடந்து த்தோடு ஆண்டொன்று
தத்தித் தத்தி நீ நடை பயில அன்னமும் தடுமாறும்
ன்றெனக்கு இம்மழலை போட்டியாவெ ன்று குழம்பிப் போகும்
முழு நிலவே நீ சிரிக்க முத்துக்கள் முகம் சிவக்கும்
தளிர்க் கரமும் தவழ் நடையும் கொண்ட தனித்தழிழே
ல்லத்தில் விளையாடும் மழலையேந ல்லறம் சொல்கிறேன்
பிறருக்கு நன்மை செய்யும் குணம் வளர்ப்பாய் பிறைநிலவே
(இ)றந்தாலும் உன் பெயரை இவ்வுலகம றக்காமலிருக்கச் செய்வாய்
(இ)ந்திய மண்ணில் பிறந்த ஈடற்ற (இ)ந்தியன் நீயெனக் காட்டுவாய்
தமிழுக்கும் தரணிக்கும் புகழ் சேர்க்க தமிழே நீ எழுவாய்
நாள் நட்சத்திரம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை நாசப்படுத்துவாய்
(து)ள்ளி விளயாடும் மானே நீ ஏழைகளுக்கு ( வ)ள்ளலாவாய்..!